Sunday 28th of April 2024 08:41:55 AM GMT

LANGUAGE - TAMIL
-
நீர்வேலியில் விபத்து; இளைஞர் மரணம்!

நீர்வேலியில் விபத்து; இளைஞர் மரணம்!


யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் விபத்தில் சிக்கிய இளைஞர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் நீர்வேலிச் சந்திக்கு அண்மித்த பகுதியில் ஞான வைரவர் ஆலயம் முன்பாக கடந்த இரவு அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதில்ச் சுவருடன் மோதியுள்ளது.

சம்பவத்தின் போது மதில் சுவரில் காணப்பட்ட கம்பி இளைஞரின் மார்பில் குத்தியுள்ளதாக தெரியவருகிறது.

படுகாயம் அடைந்தவர் வீதியில் பயணித்தவர்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல்பபட்டுள்ளார்.

இருந்தபோதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

உயிரிழந்தவர் நீர்வேலி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய டிலக்சன் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE